கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், அடையாளத்தை வளர்ப்பது மற்றும் மூளை வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாணவர்களுக்கு தமிழ்மொழி கற்றல் மிகவும் முக்கியமானது. இது தமிழ் பேசும் சமூகங்களின் வளமான இலக்கிய மற்றும் வரலாற்று மரபுகளைப் புரிந்துகொள்வதற்கான கதவுகளைத் திறக்கிறது, அதே நேரத்தில் தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது.
With clean design, daily practice, and a love for the language woven into every feature, we’re not just teaching Tamil — we’re keeping it alive.
Solloviyam is a Tamil vocabulary learning platform that makes language practice simple and engaging.
Designed for all ages, it helps you build a deeper connection with Tamil through daily word exercises.
மாணவர்கள் தெளிவான, அழகான எழுத்தினை எளிதாக எழுதிப் பழகுவதற்காக முறையான பயிற்சியுடன் கூடிய "எழுத்தோவியம் தமிழ் எழுத்து பயிற்சி" என்ற புத்தக வரிசையை பெருமையுடன் வெளியிடுகின்றோம்.
இந்தப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிக்கான எழுத்தின் வரி வடிவத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்கு விளக்கி அவர்களின் எழுத்துப் பயிற்சிக்கு உதவவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கையெழுத்து நன்கு அமைய:-
* முதலில் எழுத்தினை எழுத வைக்காமல் புள்ளிகளை இணைத்தல், வண்ணமிடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் தசை மற்றும் கை விரல்களுக்கு பயிற்சி கொடுப்பது அவசியம்.
*எழுதும் போது மாணவர்களை நேராக அமர்ந்திருக்குமாறும் எழுத பயன்படுத்தும் புத்தகத்தை 45° சாய்விலும் வைக்கச் சொல்வோம்.
* முடிந்தவரை நீண்ட, கூர்மையான பென்சிலை எழுதப் பயன்படுத்தவும்.
* பென்சிலை பெருவிரல் மட்டும் ஆட்காட்டி விரலால் பிடிக்கச் சொல்லவும். பென்சிலின் முன்பகுதி நடுவிரல் நுனிமேல் சரியான கோணத்தில் உள்ளதா என்பதை கவனிக்கவும்.
* விரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் ஆழமாக, நிதானமாக எழுத சொல்லவும்.
* 10 -15 நிமிடங்களுக்கு மேல் தினமும் எழுத சொல்வதைத் தவிர்க்கவும்.
* குழந்தைகள் பல நாள் பயிற்சிக்கு பிறகே அழகாக எழுத முடியும். எனவே அவர்கள் எழுத்தின் வடிவத்தை நன்கு உணர்ந்து எழுதும் வரை கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி முறையினை தொடர்ந்து செய்யச் சொல்லவும்.